Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இயற்கை விவசாயம் முன் மாதிரி கிராமமாக மாற்ற கோரி திருச்சி எம்பியிடம் மனு

திருச்சி மாவட்டம் பந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட போதாவூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்தப் பகுதியில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ளது.

இந்த ஊரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் போதாவூர் கிராமத்தை தேர்ந்தெடுத்து முழு இயற்கை விவசாயம் செய்யக்கூடிய வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், நஞ்சில்லா உணவு மற்றும் செலவில்லா இடுபொருட்களை பயன்படுத்தி விவசாயம் செய்திடவும்,

தங்கள் கிராமத்தை தத்தெடுத்து பயிற்சி மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு போதாக்வூரைச் சேர்ந்த வேளாண் பட்டதாரி விவசாயி ஓண்டிமுத்து பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *