திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டுப்பட்டியை சேர்ந்த ஒருவரின் மகள் கடந்த 18.01.2021 அன்று சுப்பிரமணிய சுவாமி கோவில் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவ் வழியே வந்த சுரேஷ் (34), த.பெ ரெங்கசாமி, சந்தப்பேட்டை, மணப்பாறை என்பவர் மேற்படி சிறுமியிடம் வழி கேட்பது போல் அருகில் சென்று சிறுமியின் வாயை பொத்தி புதருக்குள் இழுத்துச் சென்று கையைப் பிடித்து இழுத்து பாலியல் ரீதியாக நடக்க முயற்சி செய்ததாகவும், சிறுமி தன்னை காப்பாற்றிக் கொள்ளவதற்காக கத்தியதால் எதிரி கீழே கிடந்த கல்லை எடுத்து சிறுமியின் தலையிலும் நெற்றிலும் உதட்டிலும் மாறி மாறி தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் அப்பா கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்படி எதிரி மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 01/21, U/s 307 IPC r/w 8 of POCSO Act ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, 19.01.2021 அன்று வழக்கின் எதிரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (16.12.2025) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி சண்முகபிரியா, அவர்கள் எதிரி – சுரேஷ் (29), த.பெ ரெங்கசாமி, சந்தப்பேட்டை, மணப்பாறை என்பவருக்கு 17 ஆண்டுகள் (ஏக காலத்தில் 10 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூபாய். 20,000 அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் கீதா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments