Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஏர்போர்ட் அருகில் கோவில் பூட்டை உடைத்து, காவலாளியைத் தாக்கி அம்மன் கழுத்திலிருந்த 2தங்ககாசுகள், பணம் கொள்ளை –போலீசார் விசாரணை.

திருச்சி ஏர்போர்ட் அருகில் அண்ணா கோளரங்கம் எதிரில் அருள்மிகு பச்சநாச்சிஅம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் நேற்றிரவு நடைசாற்றப்பட்டு கோவில் இரவுக்காவலாளி ரத்தினவேல் கோவிலில் படுத்திருந்தார்.  நள்ளிரவில் கோவிலில் கொள்ளையில் ஈடுபட வந்த இரு வாலிபர்கள் கோவில் முன்புற பூட்டை உடைக்கமுடியாதநிலையில், பின்புற கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்று காவலாளியை தாக்கியதுடன் அவரிடமிருந்த 5ஆயிரம்ரொக்கம், அம்மன் கழுத்திலிருந்த 2தங்க காசுகள், உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 20ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் கொள்ளையடித்துச்சென்றனர்.

மயக்கமடைந்த காவலாளி பின்னர் எழுந்துபார்த்தபோது கோவில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததுடன், கத்திகூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தநிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குவந்த போலீசார் கொள்ளைநடந்த பகுதிகள் முழுமையும் ஆய்வுசெய்ததுடன், கொள்ளைதொடர்பாக வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *