Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் விநாயகர் சதுர்த்தி – சிலை கரைப்பு விழாவை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருச்சி மாநகரத்தில் வருகின்ற 27.08.2025 தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 29.08.2025-ம் தேதி சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலம் நடைபெற உள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடத்திட உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று 26.08.2025-ந்தேதி காலை அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மாலை உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொடி அணிப்பு நடத்தப்பட்டது.
இன்று (27.08.2025)-ந்தேதி, காந்திமார்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திமார்க்கெட் ஆர்ச்-ல் இருந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி., இ.கா.ப., அவர்களின் தலைமையில் கொடி அணிப்பு வகுப்பு தொடங்கி, கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகடைவீதி, மலைக்கோட்டை, NSB ரோடு, தெப்பக்குளம், நந்திகோவில் தெரு வழியாக சிந்தாமணி அண்ணாசிலையில் கொடி அணிவகுப்பு முடிவுற்றது. இதில் காவல் துணை ஆணையர்கள் (வடக்கு மற்றும் தெற்கு), 4 காவல் உதவி ஆணையர்கள், 5 காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 192 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *