திருச்சி
பீம நகர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரத்தினம்(63). மன்னார்புரம் குடிசை பகுதி முருகன் கோயில் அருகில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே இடத்தில் ஆட்டோ ஓட்டி வருபவர் ராஜேஷ் கண்ணா (எ)புரோட்டா ராஜேஷ்
இருவருக்கும் மன்னார்புரம் குடிசை பகுதி முருகன் கோயில் அருகில், ஆட்டோவில் சவாரி ஏற்றுவதில்

பிரச்சனை ஏற்பட்டதில், இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, ராஜேஷ் கண்ணா என்பவர், காயம் பட்டவரை, கையில் வைத்திருந்த அரிவாளால் தாக்கியதில் இடது பக்கம் கன்னத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
சம்பவிடம் சென்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வெட்டுபட்ட ரத்தினத்தின் தந்தை
ஆனந்த் குமார் காவலர் உதவி ஆணையரிடம் பழனிசாமியிடம் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

புரோட்டா ராஜேஷ் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கஞ்சா புழக்கத்திற்க்கும் ராஜேஷ்க்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தகவல் வந்துள்ளதாக தெரியவருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments