திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளிலுள்ள பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டி நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது,
100 சதவிகிதம் வேலைகளை மாணவர்கள் புரிந்து கொண்டு செயலாற்றி அடுத்த 10 ஆண்டுகளில் கம்பெனியின் முதன்மை பதவிக்கு வர வேண்டும் என்று கூறி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் 217 பழங்குடியின மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் துறையூர் வட்டாட்சியர் மோகன் நிகழ்ச்சி முடியும் வரை இருக்கை இல்லாமல் மேடையில் ஓரமாக நின்று கொண்டிருந்தார். துறையூரில் நடைபெற்ற அரசு விழாவில் துறையூர் வட்டாட்சியர் நின்று கொண்டிருந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.
துறையூரில் நடைபெற்ற அரசு விழாவில் துறையூர் வட்டாட்சியர் அமர்வதற்கு இருக்கை வழங்காமல் உள்ளூர் அரசியல்வாதிகள் இருக்கைகளை ஆக்கிரமித்தது அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments