Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் பொங்கல் விழா – வெளிநாட்டவர் பங்கேற்று தமிழ் பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சி – உறியடித்த எம்.பி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ, அருண்நேரு, மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சுரேஷ், ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.

விழாவின் போது உறியடியில் நிகழ்வில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ கலந்து கொண்டு கண்களை கட்டிக்கொண்டு ஒருவர் லெப் ரைட் சொல்ல உறியடி பானையை உடைத்து கைத்தட்டலை பெற்றார். 

பொங்கல் விழாவில் வெளிநாட்டவர் கலந்துகொண்டு விழாவை ரசித்துடன் தமிழ் பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடி மகிழ்ந்தனர். இவ்விழாவில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அவரது மனைவி மற்றும் அருண் நேரு, துரை வைகோ உள்ளிட்டோர் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். அரசுத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *