சட்டமன்ற தேர்தல் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு இன்று(26.03.21) தபால் வாக்கு பதிவு

சட்டமன்ற தேர்தல் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு இன்று(26.03.21) தபால் வாக்கு பதிவு

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் 2021 சட்டமன்ற தேர்தல் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு இன்று (26.03.2021) தபால் வாக்கு பதிவு பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 138 மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குகளும், 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 45 வாக்குகளும், 140 திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குகளும், 141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் 34 வாக்குகளும், 142 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 38 வாக்குகளும், 143 இலால்குடி சட்டமன்ற தொகுதியில் 36 வாக்குகளும், 144 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 42 வாக்குகளும், 145 முசிறி சட்டமன்ற தொகுதியில் 48 வாக்குகளும், 146 துறையூர் சட்டமன்ற தொகுதியில் 41வாக்குகளும் ஆக மொத்தம் 348 தபால் வாக்குகள் இன்றைய தினம் வருவாய்த்துறை மற்றும் மண்டல அலுவலர்கள் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW