Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களால் பரபரப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை செல்லவிடாமல் தனியார் பேருந்துகள் வழிமறித்து நிறுத்தி வைத்ததுடன், அரசுபேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் தனியார் பேருந்து நடத்துநர்கள் வாக்குவாதம்.

 

அரசு பேருந்தில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணிப்பதால் தங்களுக்கு வருவாய் பாதிப்பதாகவும், அரசு பேருந்து முன்னே செல்லக்கூடாது என தனியார் பேருந்து ஓட்டுநர், கிளீனர்கள் பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பேருந்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் அரசு பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்தில் சிறை பிடித்ததால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *