திருச்சி மாநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்ஜங்ஷன், மேரிஸ் மேம்பால பணிகள் துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கோரி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக துவக்கிட கோரி
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பற்றாக்குறை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை உடனடியாக நியமித்திட கோரி திருச்சி மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை துவங்க கோரி
திருச்சி மாவட்டத்தில் உள்ள அடிமனை மற்றும் கோயில் மனை, குத்தகை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து ஊராட்சி அமைப்புகளில் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதை கைவிட கோரி
திருச்சி மாவட்டத்தில் வீடில்லா மக்கள் அனைவருக்கும் குடிமனை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்கிட கோரி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கியும் முழுமையான வேலை வழங்கிடவும், நகர் புறங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் மேற்கு
தொகுதிக்குட்பட்டபகுதிகளில் மக்கள் கோரிக்கை கையெழுத்தியக்கம் ஜூலை 21ல் காலை 10 மணிக்கு மேற்குப் பகுதி செயலாளர் இரா முத்துசாமி தலைமையில் துவங்கியது. ஜூலை 22 மாலை 6:00 மணிக்கு 8வது வார்டில் பொருளாளர் முருகன் தலைமையிலும் ஜுலை23 மாலை 6 மணிக்கு நிர்வாக குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையிலும் ஜூலை 24 காலை 10 மணிக்கு 25வது வார்டில் நிர்வாக குழு உறுப்பினர் எம். சுமதி தலைமையிலும் மாலை 6 மணிக்கு
10வது நிர்வாக குழு உறுப்பினர் க.ஆயிஷா தலைமையிலும் மக்களிடம் கையெழுத்து பெறும்பணி நடைபெற்றது தொடர்ந்து மேற்கு தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் ஜூலை 30 வரை பல்லாயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெறும் பணி நடைபெற்று ஜூலை 31-ல் பெரும்திரள் பேரணி ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி திறுத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
Comments