Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சேதமடைந்த சாலைகளை சரி செய்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

திருச்சி பாலக்கரையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் சேதம்அடைந்த சாலைகளை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் ….

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பிரதான சாலையான பாலக்கரை சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது.இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் மாநகராட்சியிடம் புகார் மனு அளித்தனர். 

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் புழுதி பறந்து குடியிருப்புகள் மற்றும் வியாபார கடைகளில் படிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.

இதனால் சிலருக்கு நுரையீரல் பிரச்சனை மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் சாலையை உடனடியாக சீரமைத்து தர கோரி பாலக்கரையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஒரு வார காலத்திற்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி

 அளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *