அரசாணை(நிலை)எண்.344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை, நாள்.05.12.2025-ன் படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தமுள்ள 404 கிராம ஊராட்சிகளில் 04 கிராம ஊராட்சிகளை பிரித்து 08 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக 11.12.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கிராம ஊராட்சிகளைப் பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடுத்து வரும் சாதாரண தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும் எனவும், அந்த உள்ளுர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற எவரும் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை குறித்த மறுப்பினை தெரிவிக்க விரும்பினால் அவர் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு அந்த உள்ளுர் ஊராட்சி பகுதிகளில் குடியிருந்து வருகின்ற எவரிடமிருந்தும் மேலே கூறப்படும் காலக்கெடுவிற்குள் மறுப்பு ஏதும் பெறப்பட்டால் அதனை உரிய பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments