Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறுகமணி பேருராட்சி நிர்வாகத்திற்க்கு நன்றி தெரிவித்த சாலை பயனீட்டாளர்கள்

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுகமணி முதல் பெட்டவாய்த்தலை வரை இருட்டு பகுதியாகவும் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகள் உள்ளது. இப்பகுதியில் மின் பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர சிறுகமணி பேருராட்சி நிர்வாகம் சார்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் ,மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் முறையிட்டு தற்போது சிறுகமணி பேருராட்சி நிர்வாகம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் முக்கியமான விபத்துபகுதி மற்றும் வளைவு, இருட்டு பகுதிகளில் 63 இடங்களில் புதிய உயர் கம்பத்துடன் கூடிய 90 வாட்ஸ் LED மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் தொடங்கியது.

இருட்டான இப்பகுதிகளில் சாலை பாதுகாப்பினை உறுதி படுத்த பல்வேறு பணிகளை செயல்படுத்தி வரும் சிறுகமணி பேருராட்சி தலைவர் சிவகாமசுந்தரி ராஜலிங்கம் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் முன்னால் பேருராட்சி தலைவர் ராஜலிங்கம் அவர்களுக்கும் ,

செயல் அலுவலர் நளாயினி அவர்களுக்கும், மற்றும் சிறுகமணி பேருராட்சி நிர்வாகத்திற்க்கும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சாலை பயனீட்டாளர் நல குழு சார்பாக நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *