திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளைநிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் காலியாக விட்டுச்செல்வதை தடுக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் வாங்கி சென்று அருந்தியபின் காலி மதுபான பாட்டில்களை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற ஆணையின்படி 25.11.2025 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த நடைமுறை ஏற்கனவே 19.01.2024 முதல் திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நடைமுறையில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுபாட்டில்கள் மீது கடை எண். குறிப்பிட்டு ரூ.10/- என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.
அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களையும் விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையுடன் சேர்த்து கூடுதலாக ரூ.10/- வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும்.
அவ்வாறு வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளிலிருந்து வாங்கும் மதுபாட்டில்களை அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபான கடையில் காலியாக திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்கனவே பெறப்பட்ட ரூ.10/- திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments