Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வைரம்பட்டி அருகே சாலையில் கண்டெடுக்கப்பட்ட ரூ. 2.45 லட்சம் பணம்! – நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த 108 ஊழியர்கள்!

3.09.2025 அன்று இரவு 1.30 மணி அளவில் வையம்பட்டி 108 வாகனம் ஒரு கேசை மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு திரும்பும் பொழுது சாலையில் ஒரு பை கேட்பாரெட்டு கிடந்தது உடனே அங்கு சென்று அதை அவர்கள் சோதிக்கும் பொழுது அதில் ஏராளமான பணக்கட்டுகள் இருந்ததை கண்டனர்.

காவல் நிலையத்தில் வைத்து எண்ணிப் பார்க்கையில் மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 900 இருந்தது. அருகில் வேறு யாரும் இல்லாத இருட்டு நேரம் என்பதால் உடனே அதை எடுத்துக்கொண்டு மணப்பாறை காவல் நிலையத்தில் சென்று தலைமை காவலரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் பணத்தை ஒப்படைத்த சிறிது நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் பேக்கரி நடத்தும் நபர்கள் தங்களது அக்கா மகள் கல்யாணத்திற்காக மொய் செய்வதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் அது வழியில் கார் கதவு திறந்து கீழே விழுந்து விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் பணத்திற்கான ஆதாரத்தை தெரிவித்தால் போலீஸ் பணத்தை தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

இருட்டு நேரத்தில் சாலையில் கேட்பாரற்று கிடந்த பணத்தை 108 ஊழியர்கள் நிணைத்து இருந்தால் தாங்கள் அதை வைத்திருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் அவ்வாறு எண்ணாமல் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது பொதுமக்களிடம் மிகுந்த பாராட்டுகளை பெற்றது.

மருத்துவ உதவியாளர் பாரூக் சாம்சங் மற்றும் ஓட்டுநர் பிரதாப் அவர்களை காவல் நிலைய அதிகாரிகள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *