தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவி வரும் தகவல்களை நம்பி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று தமிழ்நாடு பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இதன் காரணமாக, திருச்சியில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது. வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக தங்கள் வாகனங்களின் எரிபொருள் டேங்குகளை முழுமையாக நிரப்பி (Tank Full) வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பெட்ரோல் டீசல் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் விளக்கம் அளித்துள்ளதால், பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி மக்கள் பங்குகளில் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments