Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (12.02.2024) முதல் தங்கப்பத்திரம் விற்பனை தொடக்கம்

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருச்சி தலைமை தபால் நிலையம், லால்குடி தலைமை தபால் நிலையம் மற்றும் 99 துணை தபால் நிலையங்களில் தங்கப்பத்திரம் நாளை (12.02.2024 திங்கட்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப்பத்திரம் வாங்கலாம். இதற்கான முதலீடு காலம் 8 ஆண்டுகள் ஆகும். 8-வது ஆண்டு இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப்பத்திரத்தை பணமாக வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும்.

தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை முன்முதிர்வு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 2.5 சதவீதம் வட்டி கணக்கீடு செய்து ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது தங்கப்பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இந்த திட்டமானது நாளை முதல் 16-ந்தேதி வரை ஒரு கிராம் விலை ரூ.6 ஆயிரத்து 263 என ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ளது. திருச்சி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் முதலீடு செய்யலாம்.

இதில் முதலீடு செய்ய தேவையான ஆவணங்கள் பான்கார்டு, ஆதார் கார்டு, அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம் அல்லது வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல் (அசல், நகல் சரி பார்ப்பிற்கு தேவை) தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் தங்க மதிப்பிற்கு சேமிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *