Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உண்டியல் காணிக்கை விவரம் வெளியீடு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில், 29.10.2025 அன்று உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விவரங்கள் பின்வருமாறு:
ரொக்கம் : ரூ. 62,68,522.00 ,தங்கம் : 1 கிலோ 65 கிராம்,வெள்ளி: 4 கிலோ 770 கிராம்
அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோவில் நிரந்தர வைப்புநிதி (Fixed Deposit): ரூ. 1,90,017.00, அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன் திருக்கோவில் நிரந்தர வைப்புநிதி (Fixed Deposit): ரூ. 20,750.00, அருள்மிகு பேரத்தம்மன் திருக்கோவில் நிரந்தர வைப்புநிதி (Fixed Deposit): ரூ. 5,638.00.

உண்டியல் திறக்கும் பணியில் அறங்காவலர் குழு மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில் முக்கியமாக:
V.S.P. இளங்கோவன் (அறங்காவலர் குழுத் தலைவர்),எம். சூரியநாராயணன் (இணை ஆணையர் / செயல் அலுவலர்),சி. பெரியசாமி மணி (அறங்காவலர் குழு உறுப்பினர்),

இரா. ஜானகி (அறங்காவலர் குழு உறுப்பினர்),கே. சேதுராமன் (அறங்காவலர் குழு உறுப்பினர்)
திருமதி. கி. மா. உமா
ஆகியோர் இருந்தனர். மேலும், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், செயல் அலுவலர்கள், பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ஆகியோரும் இந்தப் பணியில் கலந்து கொண்டனர்.

இந்த உண்டியல் திறப்புக்கு முன், 15.10.2025 அன்று உண்டியல் திறக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பு அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *