Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1 கோடி ரொக்கம்,2. கிலோ தங்கம், 3 கிலோ வெள்ளி பக்தர்கள் செலுத்தியதென இணை ஆணையர் தகவல்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை  செவ்வாய்கிழமை எண்ணியதில்  2  கிலோ 533  கிராம் தங்கம், 3   கிலோ 784  கிராம் வெள்ளியும்,  ரூ 1 கோடியே  74  ஆயிரத்து 528  ரொக்கம் மற்றும்  86  அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் தெரிவித்தார்.

         தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு  மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
       அவ்வாறு செலுத்திய காணிக்கைகளை  கோயிலின் மண்டபத்தில்  கோயில் இணை ஆணையர்  கே.பி. அசோக்குமார்  தலைமையில்  உதவி ஆணையர்கள்  ஞானசேகர் (  அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் உறையூர்   ), செ. மாரியப்பன் அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் கோயில் திருவாணைக்காவல்  மற்றும் செயல் அலுவலர்கள் முன்னிலையில்  தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். 
 பக்தர்கள் கடந்த  7 நாட்களாக கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில்  ரூ.  1 கோடியே 7 4 ஆயிரத்து  528   ரொக்கமும்,  2  கிலோ  533   கிராம் தங்கமும், 3   கிலோ 784    கிராம்  வெள்ளியும் 86  அயல்நாட்டுநோட்டுகளும் கிடைக்கப் பெற்றன என செயல் அலுவலரும் இணை ஆணையருமான கே.பி. அசோக்குமார் தகவல் தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *