இன்று (25.09.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உண்டியல் திறப்பு நாள்.
அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன், அ.இரா.பிரகாஷ், இணை ஆணையர் / செயல் அலுவலர், பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர், இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர், சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர், பூ.ஜெயதேவி, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தேனி, க.அருட்செல்வன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி, திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உண்டியல் திறப்பில் கலந்து கொண்டனர்.
உண்டியல் கணக்கெடுப்பில் முதன்மை திருக்கோயில் ரூ. 45,81,992 அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் ரூ. 3,12,960, அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில் ரூ. 16,162, அருள்மிகு போஜீஸ்வரர் திருக்கோயில் ரூ. 4831, 0-8.50 கிராம் பொன் இனம், 1-541 கிராம் வெள்ளி இனம்.
இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள் 16.09.2025
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments