திருச்சி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அமரர் ஊர்தி (ஆம்புலன்ஸ்) தேவி என்ற பெயரில் வாகனம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். இவருக்கு சித்ராதேவி(40)என்ற மனைவியும், தனலட்சுமி (19), திவ்யா (16) என்ற 2 மகள்களும் விக்னேஸ்வரன் (13)என்ற ஒரு மகனும் உள்ளனர்.

Advertisement

தனலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். திவ்யா துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பும், விக்னேஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நந்தகுமார் குடும்பத்தில் கடந்த ஒரு வாரமாக கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சித்ராதேவி அரளி விதையை அரைத்து தான் குடித்து மட்டும் இல்லாமல் பிள்ளைகள் தனலட்சுமி, திவ்யா மற்றும் நந்தகுமார் ஆகிய 3 பேருக்கும் கொடுத்துள்ளார். 

இதில் நான்கு பேரும் அரளிவிதை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து உள்ளனர். உடனடியாக அவர்களை காப்பாற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு முதல்கட்ட சிகிச்சையை கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சேர்த்தனர்.

இந்த நிலையில் சிகிச்சைக்கு பலனில்லால் விக்னேஸ்வரன் மற்றும் திவ்யா ஆகிய இரண்டு பேரும் பரிதாபமாக இறந்தார். மேலும் தாயும் மகரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve