Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி தாயுமானவருக்குக் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

தென்கயிலாயம் என்றழைக்கப்படும் மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் கார்த்திகைமாதம், கடைசி சோமவாரத்தையொட்டி தாயுமான சுவாமி சன்னதி முன்பு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

வட்டவடிவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சங்குகளில் புனிதநீர் நிரப்பபட்டு, சங்கல்ப்பம், சகஸ்ரநாம பூஜையினைத் தொடர்ந்து 1008 சங்காபிஷேகம் மற்றும் யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்று தீபாராதணை காண்பிக்கப்பட்டது.

இதில் மௌனமடம் கட்டளை தருமபுரம் மாசிலாமணி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சங்காபிஷேகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரைக்கொண்டு தாயுமானசாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *