Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் துப்புரவு மேற்பார்வையாளருக்கு அபராதம் விதித்து இடமாற்றம்: ஆணையர் அதிரடி உத்தரவு:

மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் மெத்தனம் காட்டிய துப்புரவு மேற்பார்வையாளர்கள் அபராதம் விதித்து இடமாற்றம் ஆய்வில் ஆணையர் அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர் அந்த வகையில் திருச்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை விதித்த கடுமையான சோதனைகளை நடத்தி அவ்வப்போது அபராதம் விதித்து வருகிறது மேலும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் அவ்வப்போது மாநகராட்சி பணியாளர்களை அழைத்து கூட்டம் போடுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மத்தியபேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தார் அப்போது கடைகளில் சர்வசாதாரணமாக பிளாஸ்டிக் கப்புகளில் டீ விற்பனை செய்தது தெரிய வந்தது இதையடுத்து அந்த கடைகளில் உள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது கடைகளில் விற்பனை செய்வதை தடுத்திட துப்புரவு மேற்பார்வையாளர் மோகன்ராஜை உடனடியாக வேறு கூட்டத்திற்கு மாற்றியும் அவருக்கு ரூபாய் 500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

ஆணையர் சிவசுப்பிரமணியன்
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *