Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எம்பவர் டிரஸ்ட் சார்பில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருச்சி எம்பவர் டிரஸ்ட் சார்பில் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண்   மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதில் வேம்பு, புங்கன், பூவரசு உள்ளடங்கிய 31 மரக்கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவிற்கு திருச்சி உதவி வனபாதுகாவலர் சம்பத்குமார், வனசரக அலுவலர் குணசேகரன், ஈரநில ஆராய்ச்சி மேற்பார்வையாளர் மாரியப்பன், சுற்றுச்சூழல் உதவி ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா

பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் அமைப்பின் தன்னார்வலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் சைமன் குமார் மற்றும் எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *