நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி

நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனம்பாளையம் ஊராட்சியில் உள்ளது வடக்கிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கலியபெருமாள் மகன் சுகுமார் (19). பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் முடி திருத்தம் செய்து கொண்டு தனது நண்பர்களுடன் பூனாம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள குளத்தில் நண்பர்கள் இருவருடன் குளிக்க சென்ற போது வழுக்கி விழுந்து ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.

சுகுமாருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் சுகுமார் நீரில் மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர். பூனாம்பாளையம் ஊராட்சித் தலைவர் ஹரிகிருஷ்ணன் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவன் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கிய மாணவன் சுகுமாரை சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் குளத்தில் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF