Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 உணவு வணிகங்களுக்கு சீல்

திருச்சிராப்பள்ளி, சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள நாகநாதர் டீ ஸ்டால், தென்னூர் அண்ணாநகர் சாதிக் காபி பார், சங்கிலியாண்டபுரம் JKS டீ ஸ்டால், மணப்பாறை நியூ குறிஞ்சி காபி பார் மற்றும் இரயில்வே நிலையம் அண்ணா பீடா ஸ்டால் ஆகிய கடைகளுக்கு

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சிராப்பள்ளி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் நேற்று ஐந்து கடைகளும் சீல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் மேற்கண்ட இடங்களில் உள்ள ஐந்து கடைகளிலும் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.மேலே கண்ட ஐந்து கடைகளிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலாகுட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம்விதிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த ஐந்துகடைகளுக்கும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அன்றைய தினமான (06.05.2023) அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் R.லால்வேனா அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த ஐந்து வணிக கடைகளும் (18.05.2023) இன்று கடைகள் சீல் செய்யப்பட்டது.

மேலும், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார். இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *