இன்று 13.08.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.
திரு. K. அருள் ஜோதி, IRPFS, முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் மதிப்பிற்குறிய Prashant Yadav,IRPFS மற்றும் உதவி ஆணையர் திரு. Pramod Nair, ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி RPF ஆய்வாளர் திரு. அஜய் குமார்,திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு திரு.சரவணன், (SARAVANAN,SI/BDS) உதவி ஆய்வாளர், அவர்கள் தலைமையில், இன்று 13.08.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை,உதவி சப் இன்ஸ்பெக்டர் சிவராஜா, வெடிகுண்டு தடுப்பு பிரிவு திரு.மணி கண்டன், கணேசன், ஸ்ரீ. திருமலை, SI/GRP/Trichy இணைந்து வருகின்ற 2025 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது,
சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் & எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments