Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

நாளை 30வது பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்று 05.12.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு & ரயில்வே போலீஸ் சார்பாக திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.

K.அருள் ஜோதி, IRPFS , முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர், தெற்கு ரயில்வே அவர்களின் உத்தரவின் பேரில், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் மதிப்பிற்குறிய Prashant Yadav,IRPFS மற்றும் உதவி ஆணையர் Pramod Nair, ஆகியோர்களது மேற்பார்வையில், திருச்சி RPF உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சரவணன், (SARAVANAN,SI/BDS) & ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் அவர்கள் தலைமையில் இன்று 05.12.2025, திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, சப் இன்ஸ்பெக்டர், RPF DOG/ROCKY & RPF தலைமைக் காவலர் ரமேஷ் வெடிகுண்டு தடுப்பு பிரிவு கணேசன் & பிரபாகரன், CITY BDDS/Trichy மற்றும் சாம் ஆலன், உதவி ஆய்வாளர்/ரயில்வே போலீஸ் இணைந்து நாளை 30வது பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர நாசவேலை தடுப்பு சோதனை நடத்தப்பட்டது, சோதனையின் போது, ரயில்வே வளாகத்திலும் ரயிலிலும் சந்தேகத்திற்கிடமான, குற்றஞ்சாட்டக்கூடிய, வெடிக்கும் பொருட்கள் & எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *