Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மூதாட்டியிடம் 71/2 பவுன் செயின் பறிப்பு- சம்பவ இடத்தில் காவல் ஆய்வாளர் விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டியிடம் 7 1/2 பவுன் செயினை பறித்து சென்ற கொள்ளையன் – குறித்து சம்பவ இடத்தில் காவல் ஆய்வாளர் கருணாகரன் விசாரணை  மேற்கொண்டு வருகிறார்.

மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நல்லுசாமியின்  மனைவி பாப்பு (68). அவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டிற்கு வெளியில் வந்து இயற்கை உபாதை கழிக்க வந்த போது கருவேல முள் காட்டில் ஒளிந்திருந்த அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க பச்சை கலர் டி.சர்ட் டார்க்கு புளு கலர் லோயர் அணிந்து முகத்தை சிவப்பு துணி கொண்டு முடியிருந்த நபர் பாப்பு கலுத்தில் இருந்த 7 1/2 பவுன் செயினை அறுத்து சென்று ஓடி உள்ளார்.

பாப்பு செயினை மீட்க திருடனின் போராடி உள்ளார், திருடன் பாப்பு கை முறுக்கி தள்ளி விட்டு செயினை பறித்து கொண்டு இருந்த போதுபாப்புவின் அலறல் சத்தம் கேட்டு பெருமக்கள்  ஒடி வந்த நிலையில் திருடன் தப்பி ஒடி விட்டான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் இளங்கோ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *