Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அம்மாவின் இரண்டாவது கணவரை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய ஏழு பேர் கைது

திருவெறும்பூர் அருகே அம்மாவின் இரண்டாவது கணவரை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிய மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் இந்திரா தெருவை சேர்ந்தவர் நாகு (எ) நாகராஜ் (48) இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.நாகராஜுக்கு திருமணமாகி பாண்டியம்மாள் என்ற மனைவியும் மகளும் உள்ளனர்.இந்நிலையில் நாகராஜுக்கு பாண்டியம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகியுள்ளது.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த கூடார செல்வி (40) என்பவரை நாகராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.கூடார செல்விக்கு முதல் கணவர் மூலம் மதிவாணன் (20) மற்றும் 17 வயது மகன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கூடார செல்வியின் இளைய மகன் திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் கேட்டரிங் பெயிண்று வருகிறான்.இந்நிலையில் கூடார செல்வி நாகராஜ் உடன் குடும்பம் நடத்துவது கூடார செல்வியின் இளைய மகனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 இதனால் கோபமடைந்த கூடார செல்வியின் இளைய மகன் தனது நண்பர்கள் ஆன நவல்பட்டு சோழமாதேவி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிளோமின்ராஜ் மகன் மோரிஸ் ராபர்ட் (21), அரியமங்கலம் காமராஜர் நகர் முத்து பிள்ளையார் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் சபரிநாதன் (20), திருச்சி காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியை சேர்ந்த மைதீன் பாய் மகன் ரியாஸ்கான் ( 20 ),திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்த சேகர் மகன் கிஷோர் (20) மற்றும் அரியமங்கலம் ஆண்டாள்

 தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது 16 வயது மகன், காமராஜர் நகர் நாகப்பன் என்பவரது 17 வயது மகன் ஆகிய ஏழு பேரும் நேற்று முன்தினம் இரவு நாகராஜ் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த நாகராஜை கத்தியால் சாரா மாறியாக வெட்டி உள்ளனர் இதில் நாகராஜுக்கு எட்டு இடங்களில் வெட்டி உள்ளனர்

இந் நிலையில் அங்கிருந்து ஏழு பேரும் தப்பி சென்றுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகராஜன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் இச்சம்பவம் குறித்துஅரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழு பேரையும் அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இதில் மோரிஸ் ராபர்ட், சபரிநாதன், ரியாஸ்கான், கிஷோர் ஆகிய நான்கு பேரை திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று பேரும் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *