திருச்சி வயலூர் சாலையிலுள்ள
சண்முகாநகர் மக்கள் நலச் சங்கம், திருச்சி, மக்கள் நலனுக்காக கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக எந்த தீர்வும் காணப்படாத சூழலில், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையில் அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சண்முகாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக—குடியிருப்பு உரிமை வழங்கல், நில அளவீடு மற்றும் பதிவேடு தயாரித்தல், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தல், மக்களின் சட்டப்பூர்வ கோரிக்கைகளுக்கு நிர்வாக பதில் வழங்கல் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன.
அனைத்து அமைதியான வேண்டுகோள்களும் மாவட்ட நிர்வாகத்தை சென்றடைந்தபோதும், தீர்வு கிடைக்காததால், மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த அமைதியான உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments