திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி.சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் திரு.வின்சென்ட் அவர்கள்
மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர் திரு. அரங்கநாதன், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் உணவு பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக திருச்சி மணப்பாறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது மணப்பாறை தாலுகா கோட்டப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி
இருசக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் திருச்சி மணப்பாறை தாலுக்கா தொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் s/o ரத்தினம் வயது 53 என்பவர் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக
எடுத்து வந்தது தெரிய வந்தது இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து அவர் வாகனத்தையும்
அவர் பதுக்கி வைத்திருந்த சாக்கு முட்டையில் கடத்தி வந்த 5500 கிலோ ரேஷன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் எதிரி ரத்தினம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவல் உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments