Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

போட்டித்தேர்வுக்கான சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை தொடர்ச்சியாக போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக மத்திய அரசு / மாநில அரசு /பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித்தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும்

(TNPSC, SSC, RRB, LIC AAO, IB, EPFO, ASST, COMMANDANT.)  (வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் அறிவியல், நடப்பு நிகழ்வுகள்..) நுண்ணறிவு, திறனறிவு. காரணவியல் மொழியறிவு (தமிழ்/ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 28.07.2025 அன்று இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

மேற்கண்ட பயிற்சி வகுப்பில், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து போட்டித்தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901,9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

 

 

 

 

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *