Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்எஸ்ஐ பூமிநாதன் ஆடு திருடியவர்களை பிடித்த போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நவல்பட்டு சோழமா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னர் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைச்கண்ணன், மத்திய மண்டல ஐஜி (பொறுப்பு) கார்த்திகேயன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் உடலுக்கு மரியாதை செய்தனர். பின்னர் வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பூமிநாதனி உடல் சோழமாநகரில் உள்ள கல்லறையில் ஏடிஜிபி முன்னிலையில் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *