Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்” மோசடி: ரூ.7.48 லட்சம் ஏமாற்றம் – உரிமையாளர் கைது

திருச்சி துறையூர் காளிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பழனியாண்டி மகன் P.தனசேகரன் என்பவர் தனது வீட்டிற்குபக்கத்தில் குடியிருந்து வரும் மாடசாமியின் மகன் அப்பாவுதுரை என்பவர் கடந்த 15 வருடங்களாக”ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ்” என்ற பெயரில் ரூ.1,00,000/-, 3,00,000/-, 5,00,000/-, மற்றும் 10,00,000/- ஏலச்சீட்டுகள் மற்றும் தீபாவளி சீட்டு நடத்துவதாகவும் அவர் கூறிய ஆசை வார்த்தைதகளை நம்பி அவர் செலுத்திய மொத்த தொகை ரூ.7,48,460/- என்றும் முதிர்வு காலம் முடிந்த பிறகு புகார்தாரர் கட்டிய சீட்டை கேட்டபோது தராமல் என்னையும் என்னை போல் பலரையும் ஏமாற்றியது தெரியவந்ததால் மேற்படி நிறுவனத்தின் மீதும் உரிமையாளர் அப்பாத்துரை என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரினை பெற்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண்.01/2026 u/s 406, 420, IPC & Sec 5 of TNPID Act 1997-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

எனவே “ஸ்ரீமாரியம்மண் சிட்பண்ட்ஸ்” நிறுவனத்தினல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் காவல் ஆய்வாளர் பொருளாதார குற்றப்பிரிவு காஜாமலை மன்னார்புரம் திருச்சி அவர்களிடம் புகார் கொடுக்கலாம்.

மேலும் இவ்வழக்கில் எதிரியான அப்பாவுதுரை என்பவர் 07.01.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *