Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஶ்ரீரங்கம் தை தேரோட்டம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நிலைத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தை மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனப்படும் தேர் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.

தை தேர் உற்சவத்தின் 9ம் திருநாள் முக்கிய நிகழ்ச்சியான தை தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதற்காக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

தற்பொழுது கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் தை தேரோட்டம் நடைபெறவில்லை. நிலைத் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *