திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.ஆணையர் லி. மதுபாலன் அவர்கள் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது . இம்முகாம்களில் வாயிலாக நகர்ப்புறத்திற்கு 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கும் வகையில் இம் முகாம்கள் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் 25.07.2025ம் தேதி மண்டலம் 4, வார்டு எண் 51 மற்றும் 52 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் யானை கட்டி மைதானம் அருகில் உள்ள பி. எஸ். எஸ். திருமண மண்டபத்திலும், 29.07.2025ம் தேதி மண்டலம் எண் 5 வார்டு எண் 8 மற்றும் 9ஆகிய , வார்டுகளுக்கு மட்டும் உறையூர் வெக்காளியம்மன் கோவில் தெரு, காவேரி மஹாலிலும்,
31.07.2025ம் தேதி மண்டலம்1, வார்டு எண் 3 மற்றும் 7ஆகிய வார்டுகளுக்கு மட்டும் ஸ்ரீரங்கம் தேவி மண்டபத்திலும், 05.08.2025ம் தேதி மண்டலம் எண் 2, வார்டு எண் 32 மற்றும் 33 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் எடத்தெரு மெயின் ரோடு பழைய கோவில் வளாகத்திலும் மேற்கண்ட தேதிகளில் அந்தந்த வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
மற்ற வார்டுகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் , மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்
Comments