Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அதனால் சுப்ரமணியபுரம் முதல் ஏர்போர்ட் வரையில் தண்ணீர் ஒரு மாத காலம் வரவில்லை.இதனை கண்டித்து
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47 வது வார்டில் மாநகராட்சி  உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் சாலை ஓரங்களில் செல்லும் குடிநீர் குழாய்களை சேதப்படுத்துவதால் குடிநீர் மக்களுக்கு சரிவர கிடைப்பதில்லை
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் உரிய புரிதல் இல்லாமலேயே உள்ளதால் அடிக்கடி சாலை ஓரத்தில் பள்ளம் தோனண்டி குடிநீர் குழாய்களை உடைத்து விடுவதால் ஆறு மாத காலமாக டேங்கர் லாரியை கொண்டு தண்ணீர் சப்ளை செய்யும் நிலை உள்ளதாகவும் மாநகராட்சி கவுன்சிலர் செந்தில்நாதன் குறிப்பிடுகிறார்

45 நிமிடத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினரும் அதிகாரிகளும் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

  
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *