திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் துறையில் கருத்தரங்கு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் துறையில் கருத்தரங்கு

" ஏன் வேண்டும் இன்பத் தமிழ் கல்வி ? " என்ற தலையங்கத்தில்   

பிஷப் ஹீபர் கல்லூரியின்
பொன் விழா அரங்கில்  நடைபெற்றது  . கல்லூரியின் முதல்வர்  முனைவர் .பால் தயாபரன் தலைமையில் இந்த கருத்தரங்கம்     நடைபெற்றது.   தமிழ் துறையின்  தலைவர்.  பால் சந்திரமோகன்,  வரவேற்புரையுடன்  கருத்தரங்கம் தொடங்கப்பட்டது . 


 இந்த கருத்தரங்கின் நோக்கத்தை  முனைவர்.   ராஜ்குமார்  வழங்கினார். சிறப்பு உரையாளராக  அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் இருந்து இணையவழியில் வாயிலாக எனர்ஜைஸ். மகேந்திரன் பெரியசாமி  சிறப்புரையாற்றினார் .    தமிழ்  மொழியின் இலக்கியம் இலக்கணத்தைப் பற்றி  சிறப்பாக எடுத்துரைத்தார்.
 இதற்கான    பல சிறப்பு  எடுத்துக்காட்டுகளை  கொண்டு விளக்கினார்.
மேலும் இலங்கையிலிருந்து ஆங்கில மொழி கற்பித்தல் துறை , கலை பீடம் யாழ் பல்கலைக்கழகத்தில், முதுநிலை விரிவுரையாளர் சிவகௌரி  ராஜ சாந்தன்   , தமிழ் மொழிக்காக ரத்தம் சிந்திய முக்கிய புலவர்களான உ.வே சாமிநாத ஐயர், பாரதியார் போன்றவர்களை போற்றி பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.  திரு முனைவர் .பெட்ரிக் ஜெபராஜ் அவர்களின்  நன்றியுரையுடன்  கருத்தரங்கம் இனிதாய் முடிந்தது .


 இந்தக் கருத்தரங்கத்தில்   தமிழ் துறையின் மாணவ மாணவியர்கள்  மேலும் பல்வேறு துறையை சார்ந்த  மாணவ மாணவியர்கள் ,  கல்லூரியின் பேராசிரியர்கள்  மேலும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு   கருத்தரங்கை    சிறப்பித்தனர்.
  பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை  பிரிவு மாணவ செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

G-QSXGXN2B7K