Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trichy's heroes

தேசிய ஊரக இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள்

8 வது ஊரக இளைஞர் விளையாட்டு   மற்றும் இந்தியாவின் விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து நடத்திய தேசிய அளவிலான  விளையாட்டுப்போட்டிகள் ஆகஸ்டு 27ம் தேதி தொடங்கி 29ம் வரை
ஹரியானாவில் நடைபெற்றது. இதில் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பேட்மிட்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ், ரோகித் இருவரும் கலந்துக்கொண்டனர். இப்போட்டியில் இருவரும் தங்களுடைய அபாரமான விளையாட்டை வெளிப்படுத்தி 4 சுற்றுகளை கடந்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழக வீரர்களில் சந்தோஷ் என்பவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். ரோகித்குமார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். வெற்றி குறித்து திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சந்தோஷ் கூறுகையில்.. இந்த வெற்றியானது என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வதற்கான ஒரு உந்து சக்தியாக அமைகின்றது.

இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு தனித்தன்மையோடு விளையாடுவதோடு நம்மோடு இணைந்து விளையாடும் சக விளையாட்டு வீரர்  மனநிலையை அவருடைய தனித்துவத்தையும் புரிந்துகொண்டு இருவரும் ஒருமித்த கருத்தோடு புரிந்துணர்வோடு விளையாடினால் வெற்றி  நம் வசம் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய தருணங்களை  அமைத்து தந்தது. 

இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே கனவு என்று கூறுகிறார் சந்தோஷ் என்றார். பூட்டானில் தெற்காசிய ஊரக விளையாட்டு போட்டி கடந்த மாதம் நடைப்பெற்றது. அப்போட்டியிலும் சந்தோஷ் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *