கொரொனா வைரஸ் நோய்த்தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் நாளை 06.05.2021 முதல் 20.05.2021 வரை காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை மட்டுமே அனைத்து டாஸ்மாக் கடைகளும் செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு எந்தவிதமான டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என மாவட்ட
ஆட்சித்தலைவர் எஸ்.திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf







Comments