பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் குழந்தை - மூட்டை கட்டி ரோட்டில் விட்ட அவலம்!!

பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் குழந்தை - மூட்டை கட்டி ரோட்டில் விட்ட அவலம்!!

This image has an empty alt attribute; its file name is Screenshot_20200924-164538_Chrome.jpg

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரிகர் நிவாஸ் அருகே பிறந்த மூன்று மணி நேரமே ஆன குழந்தை ஒன்று மூட்டையில் இருந்து அழுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது 3 மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட வெட்டப்படாத பெண் சிசு ஒன்று கதறிக் கொண்டிருந்தது.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

இந்நிலையில் ஸ்ரீரங்கம் காவல்துறையினர் உடனடியாக மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல வார்டில் சிகிக்சைக்காக அனுமதித்து உள்ளனர். இந்த சிசு யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.