Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டது. பள்ளி கல்லூரிக்கு செல்லுபவர்கள் சிரமம்

திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களுள் ஒன்று காவிரி பாலம். இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும் ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் பாலத்தை உடனடியாக சீரமைக்க ரூ.6.87 கோடியை அரசு ஒதுக்கியது. கடந்த 10-ந்தேதி(10.09.2022) நள்ளிரவு முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவிரி பாலத்தின் இரண்டு பக்கம் அடைக்கப்பட்ட இரண்டு மீட்டர் இடைவெளி இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல  அனுமதிக்கப்படும். நான்கு சக்கர வாகனங்கள், கனரக வானங்கள் என அனைத்தும் ஓயாமாரி பகுதி வழியாக சென்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள பழைய காவிரி பாலம் வழியாக மீண்டும் கும்பகோணத்தான் தான் சாலையில் திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் பகுதிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வரும். இப்பாலத்தில் குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் காவிரி பாலத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்து காவிரி பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது பொதுமக்கள் சிரமத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனங்களை மட்டும் செல்ல அனுமதிருந்தது.இந்நிலையில் காவிரி பாலத்தை ஹைடிராலிக் ஜாக்கி மூலம் தூக்கி வைத்து  பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் (20.11.2022)முதல் இரவிலிருந்து முழுவதும் மூடப்படும் என  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு வெளியிட்டார்.

இப்பணியில் 48த்திற்க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக நெடுஞ்சாலை துறை  அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். காவிரி பாலம் முழுவதும் மூடப்பட்டதால் இன்று (21.11.2022) பள்ளி கல்லூரிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் செல்வார்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மூன்று கிலோமீட்டர் தூரம் சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக  சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகர் பகுதிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி பாலத்தின் மிக அருகாமையில் உள்ள பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் பாலத்தில் மிதிவண்டியிலும் நடந்து வரும் காட்சிகளும் இன்று அரங்கேறியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *