Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சகா எனும் சகாப்தம்: வானொலி நாயகன் சகாவின் 20 ஆண்டுகால பயணத்தைப் போற்றிய திருச்சி!

காற்றலைகளில் இரவு 9 மணிமுதல் 11 மணிவரை திருச்சி மற்றும் புதுவை Hello FM 106.4ல் ஒலிக்கும் காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் டைரி சகா. அவரின் 51வது பிறந்த நாள் மற்றும் 20 ஆண்டுகள் வானொலி பயணத்தை போற்றும் விதமாக சகாவின் நண்பர்கள் நடத்திய விழாதான்
சகா எனும் சகாப்தம்

டைரி என்ற நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட இதயங்களில் இடம்பெற்றதோடு சமூக முன்னேற்றத்துக்கான பல விஷயங்களை முன்னெடுத்தவர். கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அவருக்கு வரும் ஒரு தனி மனிதனின் எண்ணங்கள், கனவு, கவலை, காதல், கண்ணீர், குடும்பம், போராட்டம், உறவுச்சிக்கல்கள் என்று பல்வேறு உணர்வுகளை தனக்கே உரிய பாணியில் வானொலியில் அவர் வெளிப்படுத்தும் பைரி நிகழ்ச்சி காலத்தால் கொண்டாடப்படும் பொக்கிஷம். எண்ணற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுதியதொடு பலரின் தற்கொலை எண்ணங்களை கைவிட வைத்ததில் இவரின் பங்கு முக்கியமானது.

தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அரசு விழாக்கள் நடத்திய நிகழ்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முத்திரை பதித்தவர். ஸ்வச் பாரத் இயக்கத்தின் தூய்மை தூதுவராக திருச்சி மாநகராட்சியால் நியமிக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களை முன்னெடுத்தவர். திருச்சிக்கு பலன் அளிக்ககூடிய TRY Foundation என்ற அமைப்பின் செயலாளராக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக மியாவாக்கி முறையில் அடர்வன காடுகளை திருச்சி மாவட்டம் முழுக்க உருவாக்கியதில் இவரின் பங்கு அசாத்தியமானது. பல்வேறு அமைப்புகள் வழங்கிய விருதுகள் இவரை அலங்கரித்துள்ளது.

வானொலி நாயகன் சகாவை கொண்டாடும் விதமாக அவரின் பிறந்தநாளன ஜனவரி 16, 2026 அன்று மொராய்ஸ் சிட்டியில் கோலாகலமான விழா நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். திருச்சியின் பிரபல மருத்துவர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், கலைத்துறையினர், ஊடகவியலாளர்கள் என்று பலதரப்பட்ட தளங்களில் இயங்குபவர்கள் கலந்துகொண்டு சகாவையும் அவரின் டைரி நிகழ்ச்சியையும் வெகுவாக பாராட்டினர்.

நடனம் பாட்டு என்று கலைநிகழ்ச்சிகளோடு நடைபெற்ற விழாவில் சகாவை பற்றி பிரபலங்கள் பகிர்ந்துகொண்ட காணொளியும் இடம்பெற்றது. Design School மாணவர்கள் வரைந்த சகாவின் ஓவியம் வெளியிடப்பட்டதோடு வந்திருதவர்கள் அதில் வாசகங்களை எழுதினர்.

இறுதியாக சகாவின் உணர்ச்சிமிக்க நிறைவுரையை கேட்டு அனைவரும் கண்ணீரோடு அவரை அரவணைத்தனர். தன் வாழ்நாள் முழுவதும் மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற மனிதனுக்கு திருச்சி மாநகரமே ஒன்று கூடி நன்றி சொன்னது.
சகா என்றுமே ஒரு சகாப்தம் தான்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *