Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மின்சாரத்துறை பொறியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரம். ஸ்ரீரங்கத்தில் மின்சாரத்துறை பொறியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்த சரித்திரபதிவேடுரவுடி) குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது.

கடந்த (03.04.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி. இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2000 பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்மந்தப்பட்ட ரவுடி மகாமுனி  என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உட்பட 19 வழக்கும். திருச்சி மாநகர காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்கு உட்பட 6 வழக்கும் (மொத்தம் 25 வழக்குகள்) நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, சரித்திரபதிவேடு(ரவுடி) மகாமுனி தொடர்ந்து இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்து வருவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் எனவும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர் விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரியின் தொடர் என் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *