Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த, ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த 11.10.22-ம்தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரவுடி பாபு (எ) குளத்துக்கரை பாபு (30) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் ரவுடி பாபு (எ) குளத்துக்கரை பாபு மீது 14 திருட்டு வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்ததாக 5 வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 25 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, எதிரி பாபு (எ) குளத்துக்கரை பாபு என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டு மற்றும் கத்தியை காட்டி பணம் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி பாபு (எ) குளத்துக்கரை பாபு மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *