திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் ஆயுதங்களை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

கடந்த (25.02.24)-ந் தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆஞ்சநேயர் கோயில் அருகில் சாலையில் நின்றுக்கொண்டிருந்த சலூன் கடைக்காரரிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் எதிரியான ரவுடி ரெனிஷ் @ ரேண்டா ரெனிஷ் (22), த.பெ.ராமலிங்கம் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மீது பொன்மலை காவல்நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட 10 வழக்குகளும், அரியமங்கலம் காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்றும் நிலுலையில் இருப்பது தெரியவந்தது. எனவே எதிரி ரெனிஷ் @ ரேண்டா ரெனிஷ் என்பவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision








Comments