Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

செல்போன் வாங்கி தராததால் வாலிபரின் விபரீத முடிவு

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தை அடுத்த பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் ரகுவரன் (22). இவர் தா.பேட்டையில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ரகுவரன் பெற்றோரிடம் விலை உயர்ந்த செல்போன் வாங்கித் தரக் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு அவரது பெற்றோர்கள் மறுத்தாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரகுவரன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *