Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கும் விழா

05.01.2026 ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் உலகம் உங்கள் கையில் என்னும் திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்ததின் நீட்சியாக இன்று திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் கலைக்கல்லூரிகளில்
உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாணவ மாணவிகளுக்கு மடிக்கனனிகளை வழங்கினார்.

கீழ்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் SIT கல்லூரியில் லெப்டாப் 230 மாணவ மாணவிகளுக்கும் UDC கல்லூரியில் லெப்டாப் 580 மாணவ மாணவிகளுக்கும் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் லெப்டாப் 712 மாணவ மாணவிகளுக்கும் GPT கல்லூரியில் லேப்டாப் 455 மாணவ மாணவிகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார் .

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் நீலமேகம், துவாக்குடி நகரக் கழகச் செயலாளர் காயாம்பு, மாமன்ற உறுப்பினர் கார்த்தி, அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, தாசில்தார்கள் விக்னேஷ், தனலட்சுமி, கல்லூரிகள் இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி !

முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினி விருதியாண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மடிக்கணினிகளை மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக சென்று முதல்வர் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.டி கல்லூரி, உருமு தனலட்சுமி கல்லூரி, துவாக்குடி அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வழங்க உள்ளோம்.

மாணவர்கள் தொழில் நுட்பங்களை அதிக அளவில் தெரிந்து கொள்ள வேண்டும். கோடிங், டேட்டா அனாலிசிஸ் போன்று மாணவர்கள் என்ன சிந்திக்கிறார்களோ அதை சார்ந்து மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறோம்.

மாணவர்களின் பயனுள்ள வகையில் இந்த மடிக்கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு இருக்கக்கூடிய மாணவர்கள் வருங்காலங்களில் தொழில் முனைவராக வரக்கூடிய அளவிற்கு இந்த மடிக்கணினி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பயன்படும் வகையில், எவ்வித சமரசமும் இல்லாமல் மேம்படுத்தப்பட்ட தரத்துடன் வடிவமைக்கப்பட்ட மடிக்கணினிகளை வழங்க ஏற்பாடு செய்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் மாற்றம் குறித்து ஜனவரி 10ஆம் தேதிக்கு பிறகு கருத்து கேட்பு நடைபெற உள்ளது அதன் அடிப்படையில் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்த உள்ளோம், அவர்கள் வழங்கக்கூடிய ஆலோசனைகளின் புதுமைகளை கொண்டு வந்து செயல்படுத்த உள்ளோம் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *