Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேலைக்கு சென்ற இளைஞர் ஆடை களைந்த நிலையில் சடலமாக மீட்பு

திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பாஸ்கர் (29) என்பவர் டிப்ளமோ படித்துள்ளார். இவர் விராலிமலை பகுதியில் உள்ள (எம்.எம்.போர்ஜின்) கம்பெனியில் சூப்பர்வசைராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணிக்காக தனது இருசக்கர வாகனத்தை மன்னார்புரத்தில் நிறுத்தி கம்பெனி பேருந்தில் சென்றதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்படாத கல்குவாரி செல்லும் பாதையில் இளைஞர் ஒருவர் தலை மற்றும் காது பகுதியில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து சாலையில் கிடந்துள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கே.கே.நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து துணை ஆணையர் ஸ்ரீதேவி   சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் விசாரணையில் இறந்தவர் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த பாஸ்கர் (29) என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் நேற்று இரவு முழுவதும் உறவினர்கள் தேடிய நிலையில் இன்று உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதிக அளவு இரவு நேரங்களில் திருநங்கைகள் தொல்லை இருந்த நிலையில், தற்போது அந்த பகுதியில் கொலை நடந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த பாஸ்கரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்குறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இளைஞர் சடலமாக கிடந்த இடத்தில் தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *